இது வரை 502 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் குருநகர் கலாசார மண்டபததில் இன்று 18.03.2022 வெள்ளிக்கிழமை தமக்கான பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. ஜீவன் தியாகராஜா அவர்களின் நெறிப்படுத்தலிலும் மற்றும் பிரதம செயலாளர் திரு. எஸ். எம். சமன் பந்துலசேன அவர்களின் வழிகாட்டலிலும் வடக்கு மாகாண மக்களிற்கான இவ் ஆண்டிற்கான நடமாடும் சேவை ‘உங்கள் வாசலில் நாங்கள்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.










