J/83 கொட்டடி கிராம அலுவலர் அலுவலகத்தில் 10.03.2024 அன்று செந்தில் கதிர்வேலாயுதசுவாமி அறநெறிப்பாடசாலையில் கடந்த ஆண்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சமயம் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வும்,அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சத்துணவை வழங்கிவரும் மூன்று சமூக சேவையாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.இதில் கிராம அலுவலர்,இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்,அறநெறிப் பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

13

J/81 ,J/83,J/84,J/85, ௧ிராம அலுவலர் பிரிவுகளில் மத்தியஸ்த சபை தொடர்பான பொது ம௧்௧ளு௧்௧ான விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம் பெற்றது. இக்கலந்துரையாடல்களில் பிரதேச செயலக மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தரால் சனசமூக மத்தியஸ்த சபை பற்றியும், மாவட்ட செயலக மத்தியஸ்த சபை ௮பிவிருத்தி ௨த்தியோகத்தரால் ௧ாணி மத்தியஸ்த சபை பற்றியும் விழிப்பூணர்வூட்டல் இடம் பெற்றது .கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ,மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
mediation 3

"பாரம்பரிய விவசாய கலாசார மரபினுடாக ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தை உருவாக்குதல்" எனும் தலைப்பில் யாழ்ப்பாண புனித மாட்டீன் சிறிய குரு மட மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று 04.03.2024 பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வின் வளவாளராக திருநெல்வேலி விவசாய பாடசாலையின் போதனாசிரியர் திரு.எஸ்.கிரிதரன் மற்றும் பிரதேச ,மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

7

 

இரண்டாம் மொழிக் கற்கை நெறி பூர்த்தி!
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இரண்டாம் மொழிக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காலை 10.00 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது. இதில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட்ட ஏனைய பிரதேச செயலகங்களைச் சார்ந்த உத்தியோகத்தர்கள் தமக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
12

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைத் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எமது அலுவலக உத்தியோகத்தர்களால் 28.02.2024 புதன்கிழமை யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வச் செயலமர்வு ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.

2

Scroll To Top