எமது பிரதேச செயலலாளர் பிரிவிற்குட்பட்ட J/88 புதிய சோனகதெரு கிராம அலுவலர் பிரிவில் 17.02.2024 தற்போதைய நுளம்பு பெருகும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் சிரமதானப் பணியில் இணைந்திருந்தனர் .


எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆயுள் வேத பாதுகாப்புச் சபைக் கூட்டம் 14.02.2024 பி.ப 3.00 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இக் கூட்டத்தில் ஆயுள் வேத பாதுகாப்புச் சபையின் இவ்வாண்டுக்கான வேலைத் திட்டங்கள்,கிராம அலுவலர் பிரிவுகளில் அமைக்கவேண்டிய மூலிகைத் தோட்டம்,ஆயுள் வேத வைத்தியத்தை நவீன மயப்படுத்தல்,ஆயுள் வேத வைத்தியர்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல்,அவர்களுக்கான விருதுகளை வழங்குதல் போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.


எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேச மட்ட சகவாழ்வுச் சங்கம் நேற்றைய தினம் உருவாக்கப்பட்டது. பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் உருவாக்கப்பட்ட இச் சங்கத்திற்காக தலைவர்,செயலாளர்,பொருளாளர் உட்பட ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.இக் கூட்டத்தில் பொலீஸ் அமைப்பினர்,சமூக மட்ட குழுக்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.






