யாழ் இந்து கல்லூரியின் 2006 ஆம் ஆண்டு பழைய மாணவர் அணியின் பங்களிப்பில் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதற்காக 40 மாணவர்களுக்கு நேற்றைய தினம் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

J/81பிரிவு கிராம அலுவலர் அலுவலகத்தில் 09.11.2023 அன்று மாலை 4.00 மணியளவில் சர்வோதய நிறுவனத்தின் ஐந்தாண்டு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

விவசாய அமைச்சின் பொருளாதாரப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய வீட்டு ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் 75000 ரூபா பெறுமதியான ஆடுகள் வழங்கப்பட்டன.

சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைச் சந்தை இன்று எமது அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 50%மானியத்தில் தேனீவளர்ப்புத் திட்டத்திற்காக நமது பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 4பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுஅவர்களுக்கான தேனீ வளர்க்கும் பெட்டி, தேனீகுடி, Stand,தேன் பிரித்தெடுக்கும் உபகரணம், புகையூட்டி , விசேடதொப்பி என்பனவழங்கப்பட்டன.







