எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆயுள் வேத பாதுகாப்புச் சபைக் கூட்டம் 14.02.2024 பி.ப 3.00 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இக் கூட்டத்தில் ஆயுள் வேத பாதுகாப்புச் சபையின் இவ்வாண்டுக்கான வேலைத் திட்டங்கள்,கிராம அலுவலர் பிரிவுகளில் அமைக்கவேண்டிய மூலிகைத் தோட்டம்,ஆயுள் வேத வைத்தியத்தை நவீன மயப்படுத்தல்,ஆயுள் வேத வைத்தியர்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல்,அவர்களுக்கான விருதுகளை வழங்குதல் போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.






