75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று J/80 கிராம அலுவலர் பிரிவில் போதை ஒழிப்புத் தொடர்பான கருத்தரங்கு 06.12.2022 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3மணியளவில் JSAC நிறுவனத்தின் அனுசரணையுடன் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டின் மூலம் நடைபெற்றது.இந் நிகழ்வில் மாவட்ட இணைப்பாளர் (போதை ஒழிப்பு), பிரதேச செயலக போதை ஒழிப்பு உத்தியோகத்தர், JSAC நிறுவன உத்தியோகத்தர் ,கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மாதர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு 06.12.2022 12.00 மணிக்கு J/85 நாவாந்துறை வடக்கு பிரிவில் உள்ள நித்தியஒளி பாலர் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு 06.12.2022 காலை 11.30 மணிக்கு J/85 நாவாந்துறை வடக்கு பிரிவில் உள்ள சென் மேரீஸ் பாலர் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு 06.12.2022 செவ்வாய்க்கிழமை 12.15 க்கு J/84 நாவாந்துறை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணாபுரம் பாலர் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






