நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் 2002ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 7(1) பிரிவின் பிரகாரம் நலன்புரி நிவாரண பலன்களை செலுத்துதல் தொடர்பில் தகுதியான அனைத்து நபர்களையும் கண்டறியும் நோக்கில் கிராம மட்டத்தில் தகவல்களை சேகரித்த எமது பிரதேச செயலகத்தைச் சார்ந்த எண்ணீட்டாளர்கள் 97 பேரும் பணிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக நேற்றைய தினம் 08.05.2023 எமது பிரதேச செயலாளரால் மெச்சுரைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வெசாக் வேலைத்திட்டத்தில் ஒன்றாக மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆரிய குளம் பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதிக்கு தமிழ்ப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போதை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 04.05.2023 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
வெசாக் வேலைத்திட்டத்தின் ஒரு செயற்பாடாக சென்.யோசப் வித்தியாலயத்திற்கு பிரதேச செயலகத்தினால் ஒரு தொகுதி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 04.05.2023 வியாழக்கிழமை காலை 10.மணிக்கு ஓவியப்போட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.







