எமது பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் 17.04.2024 புதன்கிழமை அன்று J/75 கிராம அலுவலர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தையல் பயிற்சி மாணவிகளுக்கு Business Motivation தொடர்பான பயிற்சி நெறியொன்று இடம்பெற்றது.
3
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் எமது எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/79,J/81,J/82,J/83 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பமாக நாளாக நேற்றைய தினம் 21.04.2024 அரிசி வழங்கப்பட்டது.
14

எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் "குரோதி" சித்திரைப் புதுவருட தொடக்க நாள் பணிகள் யாவும் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 16.04.2024 செவ்வாய்க்கிழமை காலை சூரிய பொங்கல் வழிபாட்டுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்கள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கி சிறப்பித்தார்.

10

J/83 கொட்டடி கிராம அலுவலர் பிரிவில் இயங்கிவரும் செந்தில் கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலையில் 14.04.2024 ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வில் எமது பிரதேச செயலாளர் கலந்து சிறப்பித்ததுடன் அங்கு வருகைதந்தவர்களுக்கு கைவிசேடமும் வழங்கி வைத்தார்.
5

"சமுர்த்தி அபிமானி" விற்பனைக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் எமது பிரதேச செயலக வளாகத்தில் கடந்த 10.04.2024 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்து.எமது பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.என்.எஸ்.ஆர்.சிவரூபன் பிரதம கணக்களர்,மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம் சிறப்பு விருந்தினராக திரு.எ.சாந்தனு சிரேஸ்ட முகாமையாளர்,இலங்கை வங்கி,ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சமுர்த்திப் பயனாளிகளின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

17

 

 

Scroll To Top