எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் கடற்றொழிலில் ஈடுபடும் வசந்தபுரம் கிராம மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பதற்கான கலந்துரையாடல் நேற்று மாலை 5.30 மணிக்கு கௌரவ கடற்தொழில் அமைச்சர் K.N.டக்ளஸ் தேவானந்தா தலமையில் இடம்பெற்றது. இதில் பல பொது மக்கள் கலந்து கொண்டு தினமும் அவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடினர்.







