எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் "குரோதி" சித்திரைப் புதுவருட தொடக்க நாள் பணிகள் யாவும் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 16.04.2024 செவ்வாய்க்கிழமை காலை சூரிய பொங்கல் வழிபாட்டுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்கள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கி சிறப்பித்தார்.







