யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் யாழ் மாவட்டத்தில் கட்டிளம்பருவத்தினரிடையே பாலியல் மற்றும் இனவிருத்திச்சுகாதார உரிமைகளை மேம்படுத்தல் திட்டத்தின் சமுதாய மட்ட முதற்கட்டமாக J/81 கோட்டை கிராம சேவையாளர் பிரிவின் கிராமத்தில் திட்டம் தொடர்பான அறிமுகப்படுத்தல் மற்றும் கிராமிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் 2023-04-30 அன்று கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் J/81 கிராம சேவையாளர் அவர்களும் SRHR பயிற்சி இலகுபடுத்துனர் திரு. தெ.சந்திரகுமார் மற்றும் மாதர் சங்க,சனசமூக நிலைய,விளையாட்டுக்கழக,இளைஞர் கழக நிர்வாக அங்கத்தவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் என பல்வேறு சமூக மட்ட அமைப்பினர் கூட்டுப்பொறுப்பு மற்றும் கூட்டுப்பிரக்ஞையுடன் பங்குபற்றியிருந்தனர்.






