வண்ணார் பண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் கல்விபயிலும் தரம் 9 மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றது. வளவாளராக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு .க.பிருந்தாபன் கலந்துகொண்டு போதைப் பொருட்கள் மாணவர்களிடத்தில் ஊடுருவும் வழிகள்,அதனால் அவர்களுக்கு ஏற்படும் உடல், உள பாதிப்புகள்,கற்றல் செயற்பாட்டில் பின்தங்கும் நிலை,அந்நிலையை எவ்வாறு தடுத்து நிறுத்தி தொடர்ந்து கற்றலில் ஈடுபடுதல் என்பன பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்களை வழங்கினார்.
 
ruks 1
ruks
 
 
Scroll To Top