யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வேலைத்தளங்களில் பால் மற்றும் பால் நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச் சூழலைக் கட்டியெழுப்புதல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு ஒன்று 03.12.2021 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் வளவாளராக திரு.ச.அறிவழகன் (பிரதான பயிற்றுவிப்பாளர்) கலந்து கொண்டு பல பயனுள்ள கருத்துகளை எடுத்துக் காட்டுகளுடன் தெளிவுபடுத்தினார்.இந்த பயிற்சி நெறிக்கு JSAC மற்றும் சொலிடாரிட்டி நிறுவனங்கள்அனுசரணையாளர்களாக கலந்து கொண்டு விடயம் சார்ந்த புத்தகம் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுதவினர்.







