இவ்வருடத்திற்கான காலாண்டுக்குரிய பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு எமது பிரதேச செயலாளர் தலைமையில் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இக் கூட்டத்தில் சமகாலச் சூழலில் சிறுவர் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. பாடசாலை அதிபர்கள்,கிராம அலுவலர்கள்,சுகாதார திணைக்கள அதிகாரிகள்,கல்வித் திணைக்கள அதிகாரிகள்,அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள்,சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள் எனப் பலர் இக் கூட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர்.






