தொம்பே மற்றும் யாழ்ப்பாண பிரதேசங்களைச் சேர்ந்த சமுர்த்தி "கெக்குளு" சிறுவர் கழக சிறுவர்களிடையே இன நல்லிணக்கம் மற்றும் கலாசார புரிந்துணர்வை பரஸ்பரம் உருவாக்கும் வகையிலான ஒரு நிகழ்ச்சி எமது யாழ்ப்பாண பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினரால் சிறப்பாக ஒழுங்கு படுத்தப்பட்டு 23.02.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் வேலைத்திட்டத்தின் முதலாவது செயற்திட்டமாக பண்ணை கடற்கரையோரப் பிரதேசத்தில் காலை 6.30-7.30 மணிவரை சிரமதானப்பணி இடம்பெற்றது. தொடர்ந்து 8.00 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலக சூழலில் மரம் நடுகை இடம்பெற்றதுடன் இரண்டு பிரிவினரும் இணைந்த வகையில் யாழ்.பொலீஸ் நிலைய வளாகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் 8.30-10.30 வரை நட்புரீதியான கிரிக்கட் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.இறுதியாக பி.ப 1.30 மணிக்கு எமது செயலக மாநாட்டு மண்டபத்தில் கலைநிகழ்வுகளுடன் இணைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

th15

Scroll To Top