வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களமும் யாழ்ப்பாண பிரதேச செயலகமும் இணைந்து நடாத்த்திய மனைப்பொருளியல் டிப்ளோமா பாடநெறி மாணவிகளின் கண்காட்சி இன்று 12.02.2024 எமது பிரதேச செயலக திறந்த வெளி அரங்கில் காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி. பார்த்தீபன் கஜானி பணிப்பாளர்,கிராம அபிவிருத்தித் திணைக்களம் ,வடக்கு மாகாணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி.சுதாகர் சுனேத்திரா மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.நிகழ்வில் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவிகளின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.






