யாழ்ப்பாண வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் தொடர்பான இரண்டாம் கட்ட செயலமர்வு நேற்று 09.05.2023 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வுக்கு வளவாளர்களாக உளநல வைத்திய நிபுணர் Dr.சிவதாஸ், யாழ் போதனா வைத்தியசாலை அவர்களும் ,வண.ஸ்ராலின் அடிகளார் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியிருந்தனர். ஐம்பது ஆசிரியர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டு நடைமுறையில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தொடர்பிலுள்ள உளரீதியான பிரச்சனைகள்,அதற்கன தீர்வுகள் பற்றி கலந்துரையாடி பயன்பெற்றுள்ளனர் .






