தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2020 போட்டியில் அரச பிரிவின் கீழ் பிரதேச செயலகங்களுக்கிடையில் போட்டியிட்ட எமது பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதற்காக இன்று 15.12.2022 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நாட்டின் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் எமது பிரதேச செயலாளர் மற்றும் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டார்கள். இவ் விருதினைப் பெறுவதற்காக அயராது பணியாற்றிய அனைத்து பிரதேச சயலக குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.






