புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலாளருக்கு பொலீசாரால் ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று 08.08.2022 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு எமது யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எதிர்ப்பு அடையாளத்தினை வெளிப்படுத்தினர்.இதில் எமது பிரதேச செயலாளர்,உதவிப் பிரதேச செயலாளர்,
கணக்காளர்,உதவித் திட்டமிடல் பணிப்பளர்,நிர்வாக உத்தியோகத்தர்,மேலதிக மாவட்டப் பதிவாளர்,சமுர்த்தி முகாமையாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும்
கிராம மட்ட உத்தியோகத்தர்கள், அலுவலகஉத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.கண்டனப் பதாகைகளை தாங்கிய வண்ணம் உத்தியோகத்தர்கள் தமது எதிர்ப்பை இங்கு வெளிப்படுத்தியிருந்தினர்.









