கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பிரதேச செயலக த்தினால் அழகிய சிறுவர் சமூகத்தின் சிறுவர்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரன் அவர்களால் தொகுக்கப்பட்ட கிராமிய விளையாட்டு நூல் வெயீட்டு நிகழ்வும் உதவி பிரதேச செயலாளர்திருமதி சோபிகா றோய்றொபின்சன் தலைமையில் கொழும்பு த்துறை துரையப்பா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.கிருஸ்ணகுமார் ,பிரதம விருந்தினராக கலந்து கொண்டார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள், மாணவர்கள்,பொது அமைப்பின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.கிராமிய விளையாட்டுகள் பல ஒழுங்கு படுத்தப்பட்டு சிறுவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.









