2021 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவப்போட்டியில் சிறந்த வெளிப்படுத்தல்களை வழங்கிய கிராம அலுவலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நேற்று 09.03.2022 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர் திரு.ஜெயபாலன் சுதர்சன்(J/87 சோனகதெரு வடக்கு ) அவர்கள் விருதினைப் பெற்றுள்ளார்.அவருக்கு எமது பிரதேச செயலகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.








