இன்று 03.02.2022 வியாழக்கிழமை வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலைய மனைப் பொருளியல் டிப்ளோமா பாடநெறி மாணவிகளின் கண்காடசி காலை 10.00 மணிக்கு பாசையூர் சென் அன்ரனிஸ் திருமண மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இதில் பிரதம விருந்தினராக திரு.இ.சிவரூபன் பிரதம கணக்காளர் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்,அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.இ.சசீலன் மாகாணப் பணிப்பாளர் கிராம அபிவிருத்தித் திணைக்களம் வடக்கு மாகாணம்,அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.நா.பஞ்சலிங்கம் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பயிற்சி நெறி மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.இப் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்த மாணவர்களின் கைவினைப் பொருடகள் கண்காட்சிக்காக அழகுபடுத்தப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கான டிப்ளோமாச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.









