"உயிரைக் காக்கும் உயரிய தானம்
உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்"
தற்போது எமது யாழ் மாவட்டத்தில் நிலவும் குருதித் தட்டுப்பாடு காரணமாக யாழ் .போதனாவைத்திய சாலை மருத்துவப் பிரிரிவினரால் விடுக்கப்பட்ட குருதிக் கொடைக்கான அவசர அழைப்பை ஏற்று எமது பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இன்று 24.04.2023 திங்கட்கிழமை குருதிக் கொடைப்பணியொன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது .எமது யாழ்பாண மாவட்ட செயலாளர் அவர்களும் இப் பணியை நேரடியாகப் பார்வையிட்டு கொடையாளர்களுடன் கலந்துரையாடினார்.இக் குருதிக் கொடையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் இணைந்து கொண்டிருந்தனர்.







