நேற்று 31.01.2023 காலை 9.00 மணிக்கு அலுவலக உத்தியோகத்தர்களுக்கான நலன்புரி நன்மைகள் சபையின் Aswasuma mobile app மூலம் கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி நெறி எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தினை சிறந்தமுறையில் மேற்கொண்டு இத்திட்டத்தினை வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்தும் வகையிலும் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செய்வதற்கான தரவுகளை இலகுவாக தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் நோக்கிலும் அஸ்வசுமா மொபைல் ஆப் தொடர்பான பயிற்சி நெறி புள்ளி விபர உத்தியோகத்தரால் நடாத்தப்பட்டது.







