தற்போதைய சூழ்நிலையில் யாழ் மாவட்டத்தில் வளி மாசடைந்துள்ளதால் பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருத்தல் அவசியமாகும்.
சுவாச மாசுக்களால் சுவாச நோய்கள் அஸ்மா, சுவாசப் புற்றுநோய், இதய நோய்கள், பாரிசவாதம் என்பன ஏற்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக (08.12.2022) தேசிய கட்டிட ஆராய்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.
நேற்று பி.ப 7.30 மணி நிலவரப்படி யாழ் மாவட்டம் வளி தரக் குறியீட்டில் (AQI) முறையே 139 ஆக உள்ளது.
இது ஒரு ஆபத்தான நிலமையாகும்.இந்தியாவிலிருந்து வரும் மாசுபட்ட வளியானது இலங்கையின் வளிமண்டலத் தொகுதிக்குள் நுழைந்துள்ளதாகவும்,
அதனால், இலங்கையின் வடக்குப் பகுதி மற்றும் சில பகுதிகள் தற்போது வளியின் தரத்தில் கடுமையான ஆரோக்கியமற்ற தன்மையை எதிர்கொள்வதாகவும் NBRO தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளிமாசடைவதினால் சுவாசம் சார்ந்த பல்வகை நோய்கள் ஏற்படல். குறிப்பாக அஸ்மா, சுவாப் புற்றுநோய், மார்புச்சளி, இருமல், கண்நோய் ஏற்படல், கண்பார்வை பாதிப்படைதல் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
விலங்குகள், கால்நடைகளின் மீள் உற்பத்தியாக்கல் பாதிப்படைதல், கால்நடைகளின் கண்பார்வை பாதிப்படைதல் மற்றும் தாவரங்களின் வளர்ச்சி, விளைச்சல் பாதிப்படைதல், இலைகளின் நிறம் மாற்றமடைதல் ஏற்படும்.
தூசு துகள்கள் வளியில் கலந்திருப்பதனால் பொருட்களை தெளிவாகப் பார்க்கமுடியாதவாறு தௌவற்ற தன்மை காணப்படும்.
அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருத்தல் அவசியமாகும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
முகக் கவசம் அணிதல் நன்று, வெளிப்புற காற்றைத் தவிர்க்க உங்கள் ஜன்னல்களை மூடுவது நல்லது, இயன்றளவு வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது.
ccc
Scroll To Top