எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் எமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பரவலாக பல்வேறு சிரமதானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.தற்போது மழைகாலம் என்பதால் டெங்கு நோயின் அபாயம் குறித்த விழிப்புணர்வுடன் கூடியதாகவே இப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.இவற்றில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,பொது சுகாதாரபரிசோதகர், சுகாதார உத்தியோகத்தர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புகளினர் உட்பட பலர் பங்கெடுத்திருந்தனர்.







