முதியோருக்கான தேசிய செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் "திரிய பியச" வீடமைப்பு திட்டத்தின் கீழ் J/74, யாழ்நகர் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு 2022/11/02 நேற்று சுபநேரத்தில்எமது பிரதேச செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டு பயனாளி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் அப் பிரிவிற்குரிய கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ,வணக்கத்திற்குரிய மதகுரு , பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் , மற்றும் கிராமிய முதியோர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







